Monday, August 3, 2009

சமூக விழிப்புணர்வு மாநாடு குவைத்-அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்குரிய தமிழ் சமூகத்திற்கு,

குவைத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாபெரும் சமூக விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எஸ். ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்கள். அது சமயம் குவைத்தில் வசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு மாநாட்டு குழுவை தொடர்பு கொண்டால் உதவிகள் கிடைக்கும்.

குவைத்திற்கு வெளியே வசிக்கும் சகோதரர்கள் கவனத்திற்கு:
குவைத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் யாரும் இருந்தால் அவர்களிடம் சொல்லி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு வருகை தந்து விழிப்புணர்வை பெற்றுச் செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
தமுமுக குவைத்

No comments: