Saturday, December 31, 2011

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் 567 காலி பணியிடங்கள்.


புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் (புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம்) உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் கீழ் 400 இளநிலை எழுத்தர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூலத்துறையின் கீழ் 115 பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 நிலையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

நீதித்துறையில் இளநிலை எழுத்தர் 28 பணியிடங்களும், 24 தட்டச்சர் பணியிடங்களும் நிரப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் பொது போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

அ. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி

ஆ. பாலிடெக்னிக் வகுப்பில் தேர்ச்சி - பத்தாம் வகுப்பிற்கு பிறகு.

இ. பாலிடெக்னிக் வகுப்பில் தேர்ச்சி - பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு.

இதை தவிர டைப் ரைட்டிங் தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கில் LOWER பிரிவில் தேர்ச்சி.
குறிப்பு : பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 மற்றும் இளநிலை எழுத்தர் ஆகிய பணிக்கு டைப் ரைடிங் தேர்ச்சி தேவை இல்லை.
வயது வரம்பு :
பொது : 32 வயது
OBC/BCM/EBC/SC/ST/BT/MBC - 35 வயது
விண்ணப்பிப்பது எப்படி:
விண்ணப்பதாரர்கள் 14.12.2011 முதல் 13.1.2012-க்குள் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கான இணையதள முகவரி :

www.pon.nic.in, http://dpar.puducherry.gov.in/, https://recruitment.puducherry.gov.in/

விண்ணப்பிக்கும் முன்பாக, தனது வண்ண புகைப்படத்தினை (பாஸ்போர்ட் சைஜ்) (Background - White இன் கலர்) 25 K க்கு குறைவான அளவிலும், தன்னுடைய கையெழுத்தினை 10 K க்கு குறைவான அளவிலும் ஸ்கேன் செய்து வைத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏற்றம் செய்ய வேண்டியது இருக்கும்.

மேலும் ஆன்லைனில் பூர்த்தி செய்து சப்மிட் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஒரு A 4 தாளில் முன்னும் பின்னுமாக பிரின்டவுட் செய்து, தனது கையெழுத்தினை போட்டு 23.1.2012-க்குள் சம்மந்தப்பட்ட துறைக்கு ரிஜிஸ்தர் போஸ்ட் மூலமோ அல்லது சாதாரண தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிப்போர் ஆன்-லைன் விண்ணப்பத்தில் எந்தப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என்று வரிசைப்படுத்தி பூர்த்தி செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கூடாது.

அரசு துறைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோர் தங்கள் துறையின் தலைவர் மூலம் 23.1.2012-க்குள் விண்ணப்பங்களை மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு அனுப்ப வேண்டும்.

இட ஒதிக்கீடு : முஸ்லீம்களுக்கென அரசாங்கம் 2 % இடத்தினை ஒதிக்கீடு செய்துள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கட்டாயம் BCM என்ற சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெற்று வேலை வாய்ப்புத் துறையில் பதிய வேண்டும். ஏற்கனவே OBC என பதிந்தவர்களும் கட்டாயம் BCM என்று மீண்டும் சான்றிதழ் பெற்று பதிய வேண்டும்.

இந்த பொது போட்டி தேர்வில் எழுதில் வெற்றி பெற காரைக்கால் வேலைவாய்ப்பு துறையின் மூலம் கோச்சிங் கிளாஸ் நடத்தப்பட உள்ளது. மிக குறைந்த நபர்களுக்கு மட்டுமே கோச்சிங் கிளாஸ் நடத்த இருப்பதால் ஒரு சிறிய போட்டி தேர்வு வைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்க்கான விண்ணப்பங்களை காரைக்கால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. சிறிய போட்டித் தேர்வு வரும் 27.12.2011 அன்று நடைபெற உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் நடைபெறும். அதற்கான தேதி, தேர்வு மையம் போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.

உதவிக்கு: இது தொடர்பாக எதாவது சந்தேகங்கள் இருந்தால் எல்லா வேலை நாள்களிலும் காலை 9.30 முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0413- 2233215.

No comments: