Sunday, January 13, 2008

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்


புது வருடம் பிறந்தது
புது வசந்தம் மலர்ந்தது
தை மாதம் பிறந்தது
தரணி எங்கும் மணக்குது
காலங்கள் கணணியில் மாறினாலும்
வண்ணக் கோலங்கள் வாசல் தோறும் மாறவில்லையே
நாடே குக்கரில் குடிபுகுந்த போதிலும் நாங்கள்
இன்னும் சர்க்கரை பொங்கலை(பானையில் வைக்கும் பொங்கல்)
மறக்கவில்லையே
சுட்டெறிக்கும் சூரியனிலும் குடிபுகும் காலமிது
அந்த சூரியனுக்கும் பொங்கல் வைக்கும்
தமிழ் நாடிது
எத்தனை திருவிழாக்கள் வந்த போதிலும்
தமிழ் ப்ண்பாடு காத்திடும் தை பொங்கலுக்கு
ஈடேது

நித்திரையில் இருக்கும் தமிழா-சித்திரை
இல்லையடா உன் தமிழ்புத்தாண்டு
அண்டிபிழைக்க வந்த ஆரியர் கூட்டம்
காட்டியதோ அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆளும் தமிழனுக்கோ சுறவம்(தை) முதல்
நாளே தமிழ் புத்தாண்டு திருநாளே

என்றும் அன்புடன்

S.M. Arif Maricar


No comments: