Saturday, September 19, 2009

குவைத் முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம் நடத்திய‌ சிறப்பு இப்தார் விருந்து!

13.09.2009 அன்று மாலை 5.00 மணிக்கு மிர்காப் (மீனா பஜார்) விசிட்டர்ஸ் உணவகத்தில் முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம் நடத்திய மாபெரும் இப்தார் சிறப்பு விருந்து உபச்சார விழா நடைபெற்றது.

இதில் மன்றத் தலைவர் இ. எம் ஹனிபா தலைமையேற்க, மன்றச் செயலாளர் கே.கே. மதிவாணன் தொகுத்து வழங்க, மன்றத்தின் முன்னோடி ஷேக் ஆதம் முன்னிலை வகிக்க, திரு. கலீல் பார்கவி MA, மற்றும் திரு. மெளலான நசீர் அகமது ஜமாலி சிறப்புரையாற்ற, மன்ற கொள்கைபரப்புச் செயலாளர் சாதிக் பாட்சா நன்றி கூற இப்தார் விருந்து இனிதே துவங்கியது.

குவைத்திலுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும், மற்றும் ஏராளமான தமிழர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மன்றத்தின் தலைவர், செயலாளர், கொள்கைபரப்பு செயலாளர் இவர்களுடன் பொருளாளர் ராதிகா செல்வம், துணைச் செயலாளர் நடராஜன், மற்றும் மக்கள் தொடர்பாளர் சேந்தை ரவீந்தர் ஆகியோர் இணைந்து அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்.








No comments: